Tuesday, October 29, 2013

வானவில் - முகநூலில் கிறுக்கியவை

முகநூலில் கிறுக்கியவை 

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. ஆனா எங்கே போனாலும்- கிளம்பும் போது கையைப் பிடிச்சு குலுக்கி " ஹாப்பி தீவாளி" அப்படின்னு சொல்றாங்க.

## சென்னை மரபு
************
Some become arrogant on achieving a small success.
Only great people can remain humble even on achieving big success.

*************
கவிதை (மாதிரி)


விதைத்தது அறுப்போம்...
அன்றே அல்ல .......
காலம் கனிந்து
*************
அய்யாசாமி கார்னர்

பீனிக்ஸ் மால் சென்று தீபாவளி ஷாப்பிங் செய்து திரும்பிய அய்யாசாமியின் புகைப்படம் இதோ....

என்னா பாட்டுடே !

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது

***********
வெற்றிக்கோடு - வாசிப்பாளர் கடிதம் 
(வாசகர் கடிதம்னு சொல்ல மனசு வரலை பாஸ்  ..!)

Dear Sir,
I read your book Vetrikodu . Its truly a great work by you, which gives us glimpse of learning experience suitable for today's competitive world. This book will be a great reference point for every youngster who wants to taste the fruit called success and develop successful traits in life.

The contents in the book are very simple and easily understandable.

I wish , you will come out with many more books like this in future .

With regards

J Manikandan (manij14@gmail.com)

வெளம்பரம் 

அகநாழிகை பதிப்பகத்தில் விழாக்கால சிறப்பு சலுகை 25 % சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்கிறது

மோகன் குமார் எழுதிய "வெற்றிக்கோடு" - புத்தகமும் (அகவொளி பதிப்பக வெளியீடு ) - 25 % டிஸ்கவுன்ட்டில் கடையில் கிடைக்கிறது. நண்பர்கள் ஆன்லைனில் வாங்க aganazhigai@gmail.com என்ற மெயில் ஐ. டி க்கு மெயிலோ அல்லது 9994541010 என்ற எண்ணுக்கு தொலை பேசியில் அழைக்கவோ செய்யலாம்.


பிறந்த நாள் கொண்டாட்டம்

எனது பெண் சிநேகாவிற்கு மட்டுமல்ல, கல்லூரி கால நண்பன் தேவாவிற்கும் அக்டோபர் 17- தான் பிறந்த நாள். (எம். ஜி ஆர் அவர்கள் அ. தி. மு. க வை துவக்கிய நாளும் இதுவே )

8 ராசியில்லாத எண் என்று சொல்வோருக்கு அக்டோபர் 17-ல் பிறந்த தேவாவை அறிமுகம் செய்து வைக்கலாம். திருச்சிக்கருகே உள்ள முருங்கப்பட்டி என்ற சிறு கிராமத்தில் பிறந்து இன்று அவன் அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது

சிறு வயதில் " 8 ராசியில்லாத நம்பரா அப்பா?" என்று மகள் வினவும் போது, தேவாவின் வாழ்வை உதாரணம் காட்டுவது வழக்கம்.கூடவே இந்த குறளையும் ....

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்
வருத்தக் கூலி தரும் !

இவ்வருடம் அக்டோபர் 17 அன்று தேவா குடும்பமும் எங்கள் குடும்பமும் வேளச்சேரியிலுள்ள ஒரு ஹோட்டலில் ஒன்றாக சந்தித்தோம். ஸ்னேஹா மற்றும் தேவா இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர். 2 மணி நேரத்துக்கும் மேல் மனம் விட்டு பேசி சிரித்து கொண்டிருந்தோம். ஒரு தேர்ந்த ஆர்கெஸ்ட்ரா பிசிறின்றி இசைப்பது போல இருந்தது நாங்கள் பேசிக்கொண்டிருந்தது...

தேவாவின் மனைவி ப்ரியா - தேவா போலவே செம interesting பெர்சனாலிட்டி. ஸ்பெஷல் Children -க்கு கவுன்சலிங் மூலம் உதவும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டுள்ளார். மதுரையிலுள்ள ஒரு பள்ளிக்கு அடிக்கடி சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார். ஸ்பெஷல் Children -க்கான பள்ளி ஒன்றை துவங்கவும் அவருக்கு கனவு உண்டு. நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறோம். வாழ்த்துவோம் !

3 comments:

  1. After Diwali Purchase - வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்...! கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்...!

    மகளுக்கு தரும் தன்னம்பிக்கைகளுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. அய்யாசாமி படம் - செம...

    மகளுக்கும் நண்பர் தேவாவிற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  3. அய்யாசாமி கார்னர்.. ஹாஹாஹா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...