Tuesday, February 9, 2016

இறுதிசுற்று-பூலோகம்- ஈட்டி- தற்காப்பு- கதகளி சினிமா விமர்சனங்கள்

இறுதி சுற்று

மையக்கதை - சக் தே இந்தியா (ஹிந்தி) யை ஒட்டியது தான்.. காதல் பரிமாணமும்,  தனி நபர் விளையாட்டும் தான் வித்யாசம்...

இருந்து விட்டு போகட்டும்..

நிச்சயம் ஒரு ரசிக்கத்தக்க முயற்சி..



மிக முக்கிய காரணம் மாதவன் மற்றும் ரித்திகா ! மாதவன் பாத்திர படைப்பு.. அட்டகாசம் ! மனிதர் அலட்டிக்கொள்ளாமல் அற்புதமாய் செய்துள்ளார்..

ரித்திகா .. சூப்பர்ப் ! நிஜ குத்து சண்டை பெண்ணை ஹீரோயின் ஆக்கியதில் உள்ளது இயக்குனரின் சாமர்த்தியம். கிளைமாக்சில் ரித்திகா வில்லனை உதைப்பதும், மாதவன் மீது தாவி ஏறுவதும் அமர்க்களம் !  படம் முழுவதும் ரசிக்கும் படி பெர்பார்ம் செய்துள்ளார் (தொடர்ந்து நடிப்பாரா??? )

நாசர் மற்றும் ராதா ரவி நிறைவு.

விளையாட்டு  குறித்த எல்லா படங்களும் அதில் உள்ள பாலிடிக்ஸ் பற்றி சொல்லத் தவறுவதில்லை.. (சொல்லாமல் இருக்க முடியாது தான்.. விளையாட்டில் பாலிடிக்ஸ் நீக்கமற நிறைந்திருப்பதால் !)

ரித்திகா மற்றும் அவர் அக்கா -இடையே உள்ள உறவை - இயக்குனர் - பெண்ணாக இருப்பதால் ரொம்ப அருமையாக கையாண்டுள்ளார்.

அழகான  பீல் குட் மூவி.. நல்ல சினிமா விரும்பி பார்க்கும் ரசிகர்கள் அவசியம் காணலாம் !

பூலோகம்

குத்து சண்டை குறித்து அண்மையில் வெளியான இன்னொரு படம்.. இதுவும் கூட வட சென்னை பின்னணியே !

மீடியாவை ரவுண்டு கட்டி அடிக்கும் திரைக்கதை - சென்சேஷன் தேடி எப்பவும் அலையும் விஜய் டிவி பற்றி சொல்கிறார்களோ என்று நினைக்க வைத்தது.



ஜெயம் ரவி - கடும் உழைப்பு மற்றும் Apt performance ! (இருப்பினும் விகடனில் இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது தந்ததில் எனக்கு உடன் பாடில்லை.. )

ஜன நாதன் படங்களில் இருக்கும் கம்மியூநிசம் இதிலும் உண்டு..

தேவையற்ற காட்சிகள் ஏதுமின்றி - கதை நேர் கோட்டில் பயணிக்கிறது..

பாடல்கள் நன்றாய் இருந்திருந்தால் படம் இன்னும் பெரிதாய் பேசப்பட்டிருக்கும்...

நேரமிருப்பின் ஒரு முறை கண்டு களிக்கலாம் !

கதகளி

வழக்கமான பழிவாங்கல் கதை தான் - திரைக்கதை மற்றும் முடிவில் மட்டும் சின்ன வித்யாசம்..

படம் துவங்கி கொஞ்ச நேரத்தில் வில்லன் இறக்க, அவரை கொன்றது யார் என்று நகர்கிறது படம் ..



2 மணி நேரம் தான் ரன்னிங் டைம் ; ஆனால் முக்கால் வாசி படம் ஒரே நாளில் நடப்பதால், எதோ 4 மணி நேரம் ஓடுகிற மாதிரி ஒரு பீலிங்..

மிக பெரிய ஆறுதல்.. ஹீரோயின் கேத்ரினா தெரசா.. அம்மணி சற்று பூசினார் போல் இருந்தாலும், முக பாவம் மற்றும் நடிப்பு - கியூட்.

கதகளி .. சுமார்..

ஈட்டி

சில மாதங்களுக்கு முன்பு பார்த்த படம். இருப்பினும் நீங்கள் தவற விடாமல் பார்க்க வேண்டும் என்பதால் எழுதுகிறேன்

இன்னொரு ஸ்போர்ட்ஸ் கதை.. நிச்சயம் வித்யாசமான பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது..

குறிப்பாக ஹீரோவுக்கு - சின்னதாக அடிபட்டு  ரத்தம் வந்தாலே - நிற்காது என்கிற விஷயம்..



அதர்வா சிக்ஸ் பேக்கில் மிரட்டுகிறார். அவரின் கடும் உழைப்பு + Dedication படம் முழுதும் தெரிகிறது. மறைந்த நடிகர் முரளியின் மகன் அவருக்கு பெருமை சேர்க்கும் படி வளர்ந்து வருவது மகிழ்ச்சி தருகிறது.

ஸ்ரீ திவ்யா - அழகு..

ரசிக்கத்தக்க ஒரு படம்.. இது வரை காணாவிடில் நிச்சயம் பாருங்கள்.. ! Surely, you will enjoy it !

தற்காப்பு 

ஆரம்பத்தில் நல்ல கதைப்பா; கொஞ்சம் வித்யாசமா முயற்சி பண்ணிருக்காங்கன்னு தோணுச்சு. போக போக, அதுவும் படம் முடியும்போது .. ரணகளம் !



ஹீரோ -வில்லன்- தெருவில போறவன், வர்றவன், ஒரே சீன் வந்தவன் இப்படி எல்லாரையும் போட்டு தள்றாங்க கிளை மாக்சில்..  படம் புடிச்ச ஒளிப்பதிவாளராவது உயிர் புழைச்சாரான்னு தெரியலை..

கொடுமைடா சாமி  !

********
அண்மை பதிவு :

விசாரணை -தமிழின் இரண்டாவது மிகச்சிறந்த படமா ?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...