Friday, May 20, 2016

வானவில் :அ.தி.மு. க வெற்றி- ஒரு பார்வை+ சச்சினை விஞ்சும் கோலி

அ.தி.மு. க வெற்றியும் தி.மு.க தோல்வியும் 

எம். ஜி. ஆருக்கு பிறகு - ஆட்சியில் இருந்தவாறு தேர்தலை சந்தித்து  -வென்ற முதல்வராக - ஜெயலலிதா ... !! சென்ற முறை ஆட்சிக்கு வந்த பின் செய்த கடும் விலை வாசி ஏற்றம், 2015- வெள்ள பிரச்னையை மிக மோசமாக கையாண்டது, அணுக முடியாத முதல்வராக இருப்பது, லஞ்ச -ஊழலின் அளவுகளை ஏராளமாய் உயர்த்தியது போன்ற விஷயங்களை தாண்டி அ.தி.மு. க வெல்ல என்ன காரணம்?

தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி அ.தி.மு. க தான். தி.மு. க வை விட எப்பவும் 5% கூடுதல் வாக்கு வங்கி அதற்கு உண்டு.... பதிவாகும் மொத்த வாக்குகளில்குறைந்த பட்சம் 30 சதவீதம் தி.மு. க விற்கும், 35 சதவீதம் அ.தி.மு. க விற்கும் கிடைப்பது அநேகமாய் மாறாது. தி.மு. க - சிறு கட்சிகள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள்  மூலம் தான் அந்த சதவீத வித்யாசத்தை தாண்ட முடியும்...அம்மா எதிர் கட்சியாகி தேர்தலை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் பா.ம. க உள்ளிட்ட அனைத்து குட்டி கட்சிகளையும் சேர்த்து கொண்டு தான் தேர்தலை சந்தித்து வெல்வார். தி.மு,க இதற்கு முன்பு செய்து வந்ததும் அது தான். இம்முறை எவ்வளவு முயன்றும் தே .மு.தி. க அவர்கள் பக்கம் வரவில்லை.( வைகோவின் கைங்கர்யம் ! )  கம்மியூனிஸ்ட், பா. ம. க போன்ற கட்சிகளை கொண்ட வர ஸ்டாலின் முயலவில்லை.

ஸ்டாலினை விடுத்து கலைஞரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது அடுத்த பெரும் தவறு. புதிதாய் வாக்களிக்கும் இளைஞர்கள் ஓட்டு இதனால் தவறியது. குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் இளம் பெண்கள் - பெண் என்பதாலும், கலைஞருடன் ஒப்பிட்டு இளையவர் என்பதாலும் அம்மாவை சப்போர்ட் செய்தனர்..

தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல அம்மா இம்முறையாவது ஏதேனும் செய்வாரா? குறைந்த பட்சம் அதிகாரிகளேனும் அணுகும் முதல்வர் ஆனால் தான் - தமிழகத்தில் ஏதேனும் சிறு மாற்றம் சாத்தியம். அதற்கான வாய்ப்பு மிக குறைவே :(

உண்மையில் தி.மு. க மற்றும் அ.தி.மு. க- இரண்டு ஆட்சிக்கும் அதிக வித்யாசங்கள் இல்லை; நிச்சயம் இவற்றிற்கு ஒரு மாற்று தேவை தான். ஆனால் அந்த மாற்று - என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசும் விஜய் காந்த் அல்ல.. சாதி அரசியல் செய்யும் அன்புமணியும் அல்ல.. என்றைக்கு அந்த நல் மாற்றம் நிகழுமோ தெரிய வில்லை..

பார்த்த படம் : என்னே நிண்டெ மொய்தீன் (மலையாளம்) 

"உனது பிரியமான மொய்தீன்" என்பது தலைப்புக்கான அர்த்தம்.

1960-70 களில் நிகழ்ந்த ஒரு நிஜ காதல் கதை.

மொய்தீன் &காஞ்சனமாலா -முஸ்லீம் மற்றும் இந்து காதல் ஜோடி.. வெவ்வேறு மதம் என்பதால் இரண்டு குடும்பத்தாரும் காதலை எதிர்க்கின்றனர்.. காஞ்சனமாலா வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்படுகிறார்.. தனது சகோதரிகள் திருமணம் ஆன பின் - வீட்டை விட்டு வெளியேறி மொய்தீனை மணம் முடிப்பேன் என்கிறார் காஞ்சனமாலா ..

இருவருக்கும் வயது 40 ஐ தாண்டிய பின்னும் குடும்பத்தினர் மனம் மாறவில்லை; ஒவ்வொரு முறை காஞ்சனமாலா வீட்டை விட்டு வெளியேற எண்ணும் போதும் ஏதோ ஒரு விபரீதம் நடக்கிறது..

இறுதியில் மொய்தீன் - ஒரு பெரும் படகு விபத்தில் சிறுவர்களை காப்பாற்றி விட்டு இறந்து விட, காஞ்சனமாலா - மொய்தீன் வீட்டுக்கு மகளாக குடியேறுகிறார்..(நிஜ காஞ்சனமாலா இன்னமும் இருக்கிறாராம்!)

நடந்த சம்பவம் என்பதால்.. அதை ஒட்டியே கதை செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்,,

மரோ சரித்ரா போன்ற துயர காதல் காவியம்.. சிறந்த மலையாள படம் என்கிற தேசிய விருதும் பல்வேறு மாநில விருதும் தட்டி சென்ற படம்..

மிக மெதுவாய் செல்கிறது.. சில நேரம் தேவையற்ற detailing .. அதனால் இழுப்பது என்கிற ஒரு குறை தவிர நிச்சயம் ரசிக்கத்தக்க- மனதை பாதிக்கும் ஒரு படம்..

ஹெல்த் பக்கம்: 

சோடா குடிப்பது ஜீரணத்துக்கு பலன் தருமா ?

டாக்டரை கேளுங்கள் பகுதியில் டிவியில் கேட்ட விஷயம் இது:

சோடா குடித்த பின் - அடைத்து வைக்கப்பட்ட காற்று உள்ளே சென்று குடித்தவருக்கு ஏப்பம் வர வைக்கிறது; மற்றபடி ஜீரணத்துக்கு உதவுவதில்லை. ஜீரண பிரச்சனை என்றால் சோடா குடிப்பதை விட ஜெலூசில் போன்ற அன்டாசிட் சாப்பிடலாம்..

அழகு கார்னர் 



ஒரு  அனுபவம் :  சார்.. உங்க போன் நம்பர் சொல்ல முடியுமா?  

அண்மையில் வேளச்சேரி PVR தியேட்டரில் உள்ளே நுழையும் போது - நம்மை 2 நபர்கள் அணுகி " சார் லக்கி டிரா வச்சிருக்கோம்; உங்க டீடைல்ஸ் சொல்லுங்க; பரிசு கிடைக்கும்" என்றனர்..

ஒரு பேப்பரை கையில் வைத்து கொண்டு " உங்க பேர்; போன் நம்பர் சொல்லுங்க"

சில நொடி யோசித்து விட்டு - "அந்த பேப்பரை கொடுங்க" என்றேன்.. சற்று தயக்கத்துடன் கொடுத்தனர்.. பார்த்தால் எதோ ஒரு ரிசார்ட் கம்பனி - தங்கள் கிளப்புக்கு ஆட்கள் பிடிக்க இந்த வேலை செய்கிறார்கள் என்று புரிந்தது

அடுத்து " சார் உங்களுக்கு லக்கி டிராவில் பரிசு விழுந்திருக்கு"  என போன் வரும்.. சென்றால்.. ஒரு லட்சம் ஸ்கீமை 10,000 க்கு தர்றோம் என்று தலையில் கட்டுவார்கள்..

எனக்கு ரொம்ப கடுப்பான விஷயம்.. PVR காரர்கள் ஸ்க்ரீனுக்கு உள்ளே நுழையும் இடத்தில் இவர்களை அனுமதித்தது தான் ! மால் என்றால் கூட பரவாயில்லை.. இங்கு தியேட்டரில் ஒவ்வொரு ஸ்க்ரீன் முன்பும் நின்று இப்படி வாங்கும்போது தியேட்டர் காரர்கள் தான் செய்கிறார்கள் என மக்கள் டீடைல்ஸ் தரவும், பின் ஏமாறவும் வாய்ப்புகள் அதிகம்..

இது குறித்து PVR க்கு ஒரு மெயில்/ கம்பிலேயின்ட் அனுப்பியுள்ளேன்..

நமது தகவல்களை தரும் முன் எச்சரிக்கை மிக அவசியம் !!

கவிதை பக்கம் 

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே ! - ஆத்மா நாம்

ஐ. பி. எல் கார்னர் 

சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது ஐ. பி. எல்!!

6 அணிகள் - முதல் 4 இடத்திற்கு கடும் போட்டியிடுகின்றன. எனக்கு பிடித்தமான வீரர்கள் கோலி மற்றும் டீ வில்லியர்ஸ்  இருப்பதால் பெங்களூருவை சப்போர்ட் செய்து வருகிறேன். கடைசி மேட்ச் ஆன டில்லியை ஜெயித்தால் - மிக அதிக ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு நிச்சயம் ப்ளே ஆப் உள்ளே நுழைந்து விடும்...!

ஹைதராபாத் மற்றும் குஜராத் நிச்சயம் ப்ளே ஆப் செல்லும் என நினைக்கிறேன்.. டில்லி, கொல்கத்தா, மும்பை மூன்றும் மற்ற ஒரு இடத்துக்கு போராடும்..

கையில் 6 தையலுடன் கோலி அடித்த செஞ்சுரி அமர்க்களம் !!சச்சினின் சாதனைகளை விஞ்ச எந்த வீரரும் வர முடியாது என நினைத்திருந்தேன். கோலியின் இந்த பார்ம் 4-5 ஆண்டுகள் தொடர்ந்தால் சச்சினின்  சில பெரிய சாதனைகள் வீழும் !! அப்படி வீ ழ்த்துவது ஒரு இந்தியர் என்ற வகையில் ... மகிழ்ச்சி !!

2 comments:

  1. இந்த தேர்தலில் மூலம் ஒவ்வொரு கட்சிக்கும் தனது செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு.

    இரண்டாவதாக,


    காங்கிரசுக்கும் மற்ற கட்சிகளுக்கும் அவர்களது பலத்திற்கு மேல் அதிகமான தொகுதிகளை தானம் தந்தது ஒரு காரணம். இதில், முக்கியமாக, தே.தி.மு.கே. விலிருந்து பிரிந்து வந்த மூவரின் நிலையம் பாருங்கள். இந்த தொகுதிகளில் தி.மு.க நின்றிருந்தால் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரித்து இருக்கலாம்.

    நிற்க. இனி.

    தேர்ந்து எடுக்கப்பட்ட அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைக் கூறும் அதே நேரத்தில்,

    சட்ட அவையை ஒரு சண்டைக் களமாக மாற்றாது, பொறுப்புடன் நடந்து கொள்வது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டு கட்சிகளின் பொறுப்புமே.

    தனிப்பட்ட நபர்களை விமர்சிக்காது, எடுத்துக்கொண்ட பொருள் பற்றி மட்டும் பேசி சட்ட சபையின் விவாதங்களை நல்ல முறையில் எடுத்துச் செல்வது வெற்றி பெற்ற இரு கட்சிகளுக்குமே நல்மதிப்பைத் தரும்.

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

    எனும் வள்ளுவன் குரலை, குரளை

    அவையின் இருபக்கத்தில் உள்ளோரும் மனதில் ஈர்த்து நடந்து
    கொள்ளவேண்டும்.

    1952 முதல் இருந்து மக்களின் உண்மை நிலை தனை பிரதிபலித்து வந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் இனி அவையில் குரல் கொடுக்க இல்லை என்பது ஒன்று தான் வருத்தம் அளிக்கிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. தேர்தல் அலசல் சிறப்பு! கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களை திமுகவினர் கோட்டைவிட்டுவிட்டனர். லக்கிட்ரா என்று சொல்லி வருவோரிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்தான். கோஹ்லியின் ஆட்டத்திறமை வியக்க வைக்கிறது! நிச்சயம் அவர் சச்சினை மிஞ்சுவார் என்று நம்புவோம்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...