Thursday, June 16, 2016

பூவார் (கேரளா)- ஒரு பயண அனுபவம்

ண்மையில் நண்பர்கள் பாலா- டெய்சி குடும்பத்துடன் கேரளாவில் இருக்கும் பூவாருக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டோம். அப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு இது:

பூவார் - கேரளா- தமிழக பார்டரில் இருக்கும் ஒரு பேக்வாடர்ஸ் இடம்...இங்கிருந்து சில கிலோ மீட்டர் தாண்டினால் தமிழகமும், பின் நாகர்கோவிலும் வந்து விடுகிறது.. நாங்கள் 3 நாள் பூவார் மகேந்திரா ரிசார்ட்டில் தங்கினோம். இதில் ஒரு நாள் பேக்வாட்டர்ஸ் பயணம்.. மற்ற படி ரிசார்ட்டில் இருக்கும் விளையாட்டுகள், மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விடல்.. (ரிசார்ட் காரர்கள் மீன் பிடிக்கும் வரை பேசாதிருந்து விட்டு பிடித்த பின் வந்து புலம்பியதால் - மீன்களை ஆற்றில் விட வேண்டியதானது) என மிக ரிலாக்ஸ்டு ஆக இருந்தோம்.

இறுதி நாள் ரூம் காலி செய்துவிட்டு - தொட்டி பாலம், திப்பரப்பு அருவி, பத்மநாபபுரம் பேலஸ் மற்றும் முட்டம் பீச் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தோம்...இந்த இடங்கள் அனைத்தும் பூவாருக்கு அருகில் தான் உள்ளது

பயணத்தில் சில இனிய விஷயங்கள்: 

பேக்வாட்டர்ஸ் பயணம் 

மகேந்திரா ரிசார்ட்டில் முதல் முறை தங்கிய அனுபவம்; இந்த ரிசார்ட் பற்றி நன்கு அறிய முடிந்தது ; அங்கு ஒவ்வொரு வேலையும் சாப்பிட்ட வகை வகையான உணவுகள் 

திப்பரப்பு அருவி குளியல் (முதல் நாள் வரை அருவியில் யாரும் குளிக்க அனுமதியில்லை; நாங்கள் சென்ற அன்று ஊரில் திருவிழா என மக்களை குளிக்க அனுமதித்தனர்.. ஆனந்த குளியல்.. அனைவரும் என்ஜாய் செய்தோம் )

பத்மநாபபுரம் பேலஸ் அனைவரும்  மிக ரசித்தனர்.. 

என நிறையவே இனிய நினைவுகள். 

நாங்கள் சென்று வந்து வாரங்கள் பல கடந்து விட்டதால் விரிவாக எழுத இயல வில்லை.. புகைப்படங்களும் அவை பற்றிய சிறு குறிப்பும் மட்டும் பகிர்கிறேன் 

சென்னை டு திருவனந்த புரம் - விமானத்தில் பயணித்தோம்; திரும்பியதும் அவ்வாறே; ஒரு மாதம் முன்பு புக் செய்ததால் மிக குறைவான விலையில் டிக்கெட் போட முடிந்தது 



நாங்கள் தங்கிய பூவார் மகேந்திரா ரிசார்ட் 


மகேந்திரா ரிசார்ட் 

மனைவி, மகள், நான் மூவருமே முதல் முறை பில்லியர்ட்ஸ் ஆட கற்று கொண்டோம்.. சுவாரஸ்யமான விளையாட்டு !!
பேக் வாட்டர்ஸ் படகு  பயணம் 


இப்படி அமர்ந்திருந்த பறவை.. 

போட்டோ எடுப்பது தெரிந்து - தண்ணீரில் நீந்தி எஸ்கேப் ஆனது 


மிதக்கும் படகு உணவகங்கள்.. மீன் .... முக்கிய, ருசியான உணவு 


பேக் வாட்டர்ஸ் படகு பயணத்தில் கேத்தலின்   


ஏரிக்கு நடுவே அமைந்துள்ள மாதா சிலை 


படகு பயணத்தில் வரும் பாலம் ஒன்று.. 

தொட்டி பாலம் அருகே - தோட்டம் ஒன்றில் 

பிடி... பிடி.. மீன் பிடி 


எனது மகள் சிநேகா, பாலா மகள் கேத்தலின் இருவருக்கும் சட்டம் படிக்கவே விருப்பம். பூவாரில் வாக்கிங் செல்லும் போது காவல் நிலையத்தை பார்த்து, உள்ளே செல்லவேண்டும் என்று கூறினர்.. சென்று காவலர்களிடம் சற்று பேசி விட்டு, நியாபகத்திற்கு எடுத்த போட்டோ..... 

கிராமத்தில் மீன் வலை பின்னும் ஒரு குடும்பத்தாருடன் அளவளாவல் 

திருநெல்வேலி அருகே ஒரு மிக பழமையான சர்ச் சென்ற போது எடுத்த புகைப்படம் 

முட்டம் கடற்கரையில் ஒரு மாலை வேளை 



பூவார் மிக ரிலாக்சட் ஆக 3 நாள் போல சென்று தங்க ஏற்ற இடம். திருவனந்த புரம் வரை ரயில் அல்லது விமானத்தில் சென்று பின் ஓரிரு மணி நேர கார் பயணத்தில் பூவார் அடையலாம். 

பூவாரில் நிறைய நல்ல ரிசார்ட்கள் உள்ளன. தண்ணீரில் மிதக்கும்  ரிசார்ட் ஒன்று மிக பிரபலம். அண்மையில் எனது அலுவலக நண்பர்கள் சிலர் அங்கு சென்று தங்கி வந்தனர். பூவார் செல்லும்போது முடிந்தால் நாகர்கோவில் அருகே இருக்கும் பத்மநாபபுரம் பேலஸ், தொட்டி பாலம், திப்பரப்பு அருவி இவையும் சேர்த்து பார்க்க திட்டமிடுங்கள்... 

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...