Sunday, January 29, 2017

அதே கண்கள்: சினிமா விமர்சனம்

யாரிப்பாளர் சி. வி குமார் படங்கள் அநேகமாய் தரமான தயாரிப்பாய் இருந்து விடுகிறது.. அதே கண்களும் விதி விலக்கல்ல..

Image result for adhey kangal

கதை 

வழக்கமான காதல் கதை போல தான் துவங்குகிறது.. பின் ஹீரோ சிறு இடைவெளியில் இருமுறை காதல் வயப்படுகிறார். (ரெண்டுமே டபிள் சைட் லவ் பாஸ் !!) முதல் காதலி காணாமல் போனதால் தான் அடுத்த காதல் துவங்குகிறது..

முதல் காதலி பற்றி கிடைக்கும் தகவல்கள் - மீண்டும் அவளை தேடி போக வைக்கிறது.. அந்த தேடல் பல மர்மங்களை சொல்கிறது..

திரைக்கதை 

வழக்கமாய் விமர்சனங்களில் முதல் பாதி அருமை; ரெண்டாவது பாதியில் சொதப்பி விட்டனர் என்போம்; இங்கு ரெண்டாவது பாதி தான் படத்தை நிமிர்த்துகிறது; முதல் பாதி நீளமாகவும், சற்று அயர்ச்சி தருவதையும் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் நெகட்டிவ் காரெக்டர் மற்றும் அதை காட்டிய விதம் தான் படத்தை வித்தியாச படுத்துகிறது. இந்த பாத்திரம் மட்டும் - பச்சைக்கிளி முத்துச்சரம் பட சம்பவங்களை  நினைவூட்டுகிறது..

நடிகர்கள் 

கலையரசன் முதலில் கண் தெரியாதவராகவும்,  பின் கண் வந்த பின் காதலியை தேடி அலைபவராகவும் apt performance ! ஜனனி ஐயர் அழகாக வந்து போகிறார்.

இரண்டாவது நாயகியாய் வரும் ஷிவடா தான் (என்ன பேர் சார் இது !) சர்ப்ரைஸ் பாக்கெட். சரியான காரெக்டர் !!  இது மாதிரி ஆட்களும் நிச்சயம் நாட்டில் இருக்கவே செயகிறார்கள்.

பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்; சண்டைகள் இல்லாதது ஆறுதல்; படம் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது.. !!

இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் முதல் படத்தில் வித்தியாச கதை களனை எடுத்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். முதல் பாதி டைட்டான திரைக்கதை இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

அதே கண்கள் - நிச்சயம் ஒரு முறை காணலாம் !

****
அண்மை பதிவு 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...