Sunday, January 29, 2017

வானவில்+தொல்லைக்காட்சி: அச்சமின்றி - சந்திர நந்தினி -ஜல்லிக்கட்டு போராட்டம்

பார்த்த படம் : அச்சமின்றி

சமுத்திரக்கனி, விஜய் வசந்த் நடித்த இப்படம்.. ஒரு நல்ல விஷயத்தை அடிப்படையாக கொண்டது.. கல்வி துறையில் நடக்கும் ஊழலில் துவங்கி மார்க் வாங்க வைக்க பள்ளிகள் செய்யும் அக்கிரமங்கள் வரை பலவற்றை பேசுகிறது.. ஆயினும், லாஜிக் மீறல்கள், நல்ல ஹீரோ இல்லாதது, சற்று தொய்வான திரைக்கதை (பாட்டும் , சண்டையும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது !) ..இவற்றால் இலக்கை எட்டாமல் போகிறது.

Image result for achamindri

படத்தின் உருப்படியான விஷயம் அது உரக்க பேசும் கல்வி துறை பற்றிய கடைசி அரை மணி நேரம் தான் !

டிவியில் பார்த்த படம் : வை ராஜா வை

ஜெயா டிவியில் காணும் பொங்கல் அன்று ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை ஒளிபரப்பினர். பின்னால் நடக்க போவதை முன் கூட்டியே அறியும் ஹீரோ பாத்திரம்.. இதை வைத்து காசு செய்ய நினைக்கின்றனர் சிலர்.. கதை இதன் அடிப்படையிலேயே செல்கிறது. ஓரளவு நல்ல முடிச்சு என்றாலும் - படம் ஏனோ மிக பெரும் தோல்வியை சந்தித்தது; எப்படி முடிப்பது என தெரியாமல் அவசரம் அவசரமாக முடித்துள்ளனர் படத்தை.. ஒரு proper conclusion இல்லாமல் படம் முடிகிறது..

QUOTE CORNER


நல்ல சீரியல்: சந்திர நந்தினி

விஜய் டிவியில் மாலை 7.30க்கு ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல் சந்திர நந்தினி ! வீட்டம்மணியின் அலுவலகத்தில் சிலர் சொன்னதால் பார்க்க ஆரம்பித்தார். நானும் அவ்வப்போது (மட்டும்) கண்டு வருகிறேன்.

Image result for chandra nandini tamil

சந்திர குப்த மௌரியர் என்கிற நல்ல அரசர் பற்றி பள்ளியின் வரலாற்று பாடங்களில் படித்திருப்போம். அவர் தான் கதை  நாயகர்.நந்தினி என்பது அவரது மனைவி பெயர். இவர்கள் இருவரின் கதை தான் சந்திர நந்தினி. கூடவே சாணக்கியர் பாத்திரமும் !

நடந்த கதை என்பதால் - வரலாறு அறியும் ஆர்வம்.. கூடவே அதனை சுவாரஸ்யமாக பதிவு செய்த டீம்.. இவை இரண்டும் தான் சீரியலை அவ்வப்போது காண வைக்கின்றன.

ஜல்லிக்கட்டும் மாணவர் போராட்டமும் 

ஜல்லி கட்டு பற்றி ஏன் எதுவும் எழுத வில்லை என நான்கைந்து நண்பர்களெனும் கேட்டு விட்டனர்.

பொதுவான மக்கள் கருத்துக்கெதிராக நம் கருத்து இருக்கும் போது அமைதியாக இருப்பது நல்லதென நினைக்கிறேன்.

இருப்பினும் இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் - மிக அற்புதமாக போராட்டம் நடத்தியதை ரசிக்காமலும், பாராட்டாமலும் இருக்க முடியாது.

போராட்டத்தை சரியான நேரத்தில் முடித்திருக்க வேண்டும்!  தலைமை என்று எதுவும் தெளிவாக இல்லாததால் வந்த விளைவு. கடைசி நாளில் போலீஸ் வன்முறை நிச்சயம் கண்டிக்க தக்கது. ஆனால் பெரும்பான்மை மக்கள் அதை பற்றி அதிகம் கண்டு கொள்ளாமல் " அடுத்த வேலையை பார்க்கலாம்" என நகர்ந்து விட்டனர் .

மெரினாவில் இனி போராட கூடாது என 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள் கவனித்தீர்களா? இறுதி நாள் வன்முறையே - இனி இப்படி கூட்டம் கூடக்கூடாது என மிரட்ட தான்... ! அதுவே ஒரு மினி 144 தான் !


கல்யாணம் முதல் காதல் வரை 

வீட்டில் அவ்வப்போது பார்த்து வந்த சீரியல் "கல்யாணம் முதல் காதல் வரை" பழைய ப்ரியாவிற்காக நானும் அவ்வப்போது பார்த்து வந்தது உண்டு.

ப்ரியா என்ன காரணத்தாலோ விலகிய பின் கதையே மிக பெரும் அதள பாதாளத்தில் விழுந்து விட்டது; சினிமா பாணியில் - 2 காரெக்டர் - ஆள் மாறாட்டம் என நம்ப முடியாத படி சென்று திடீரென ஒரே நாளில் கதையை முடித்து சுபம் போட்டு விட்டார்கள் !

பலரால் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு சீரியலை - எப்படி கொடுமைப்படுத்தி - வெறுக்கடிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக முடிந்து விட்டது கல்யாணம் முதல் காதல் வரை !

****
அண்மை பதிவு


அதே கண்கள்: சினிமா விமர்சனம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...