Tuesday, February 28, 2017

வானவில்- லன்ச் பாக்ஸ் சினிமா - அதிமுக அரசியல் -சென்னை கிளைமேட்

லன்ச் பாக்ஸ் ( ஹிந்தி )

மும்பையில் டப்பா வாலாக்கள் மதிய சாப்பாட்டை  கொண்டு வந்து தரும்போது இருவரின் சாப்பாடு முற்றிலும் மாறிப்போய் விடுகிறது. இதில் ஒரு வித்தியாச காதல்  உதிக்கிறது;

Related image

ஆண் - மனைவியை இழந்தவன்- ஓரிரு  மாதத்தில் ரிட்டையர் ஆக போகிறவன்.. பெண்.. கணவனால் முழுதும் நிராகரிக்கப்படும் ஒருத்தி.. மேலும் கணவன் இன்னொரு பெண்ணோடு உள்ள தொடர்பினால் இவளை கண்டு கொள்வதே இல்லை..

இந்த இருவருக்கும் கடிதம் மூலம் காதல்  வளர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண் கணவனை தூக்கி எறிந்து விட்டு வெளியே வர நினைக்கிறாள்.. கடித காதலனுடன் அவள் இணைந்தாளா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் விடையை நம் ஊகத்திற்கு விட்டு படத்தை நிறைவு செயகிறார்கள்

நிச்சயம் வித்யாசமான படம் .. சந்தேகமே இல்லை. இர்பான் கான் மற்றும் நிம்ரத் கவுர் நடிப்பு  அட்டகாசம். திரைக்கதை - இயக்கம் இரண்டும் பாராட்டும் வண்ணம் இருந்தது.

வசூல் ரீதியிலும் வெற்றி பெற்ற இப்படத்தை ..........நல்ல படம் விரும்புவோருக்கு நிச்சயம் பரிந்துரைக்கிறேன் !

டெக்கான் கிரானிக்கில்

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பதிப்பு சென்னைக்கு வரும் முன் டெக்கான் கிரானிக்கில் பத்திரிக்கை ஒரு கலக்கு கலக்கியது; டைம்ஸ் ஆப் இந்தியா வந்த பின் டெக்கான் சுத்தமாய் படுத்து விட்டது என நினைக்கிறேன்.

பல பெட்ரோல் பங்குகளில் காலை வேளை டெக்கான் கிரானிக்கில் பத்திரிக்கை இலவசமாய் தருகிறார்கள். புதிதாக வந்த பத்திரிக்கைக்கு தான் இப்படி பிரபலமாகும் வரை இலவசமாய் தரும் வேலை நடக்கும். இங்கு டெக்கான் கிரானிக்கில் வந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் இது நடக்கிறது. பல மாதங்களாக கவனிக்கிறேன். இது தொடர்கிறது ! பத்திரிக்கை நடத்துவது எவ்வளவு பெரிய கஷ்டமான காரியமாக மாறி வருகிறது !!

ரசித்த பதிவு - ஹானர்ஸ் செல்வகுமார்

பதிவர் யுவகிருஷ்ணா போலியோவால் பாதிக்கப்பட்டு - கல்லூரியில் சீட்டு மறுக்கப்பட்டு போராடி, கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்வில் உயர்ந்த செல்வகுமார் என்பவரை குறித்து எழுதிய கட்டுரை - அற்புதமானதோர் தன்னம்பிக்கை கட்டுரை.. 

இக்கட்டுரையை நீங்கள் இங்கு வாசிக்கலாம் !

//அனுதாபம் என்பதும் ஒருவகை அன்புதான். அதை மறுக்கக்கூடாது. நாம் மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் நம் மீது அன்பு செலுத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் கோயில் படிகளில் நான் தவழ்ந்து ஏறும்போது சில வடநாட்டு யாத்ரீகர்கள் காசு கொடுப்பார்கள். கவுரவம் பார்க்காமல் அதை வாங்கிக் கொள்வேன். மகிழ்ச்சியோடு போவார்கள். அந்த காசை கொண்டுபோய் கோயில் உண்டியில் போடுவேன். ‘பிச்சைக்காரன்னு நெனைச்சியா?’ என்று அவர்களிடம் நான் கோபத்தை காட்டியிருந்தால், அவர்களது அன்பை மறுக்கக்கூடியவனாக ஆகியிருப்பேன். ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருது வாங்கும் மேடையில் சொன்னாரே, ‘அன்பு வழி என் வழி’ என்று. என்னுடைய வழியும் அதுதான். அன்பு வழியை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தோல்வியே இல்லை// 

அருமை !

அழகு கார்னர் 

மஞ்சிமா மோகன் 

பயணத்துக்கு தமிழில் ஒரு டிவி !!

தமிழில் ட்ராவல் XP என்றொரு சானல் அண்மை காலமாக ஒளிபரப்பாகி வருகிறது;தமிழ் டப்பிங்கில் இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றை சுற்றி .காட்டுகிறார்கள். மேலும் அங்குள்ள சிறப்பம்சங்களும் பேசுகிறார்கள்.பயணத்தில் ஈடுபட்டுள்ளோர்க்கு இந்த சானல் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் !

அதிமுக அரசியல் 

பிரேக்கிங் நியூஸ் எல்லாம் முடிந்து - ஆட்சி (!!) பொறுமையாக துவங்கி  விட்டது.

ஜெ அவர்கள் விலக்கி வைத்த TTV தினகரன் ஒரே நாளில் கட்சியில் சேர்க்கப்பட்டு அன்றே துணை பொது செயலாளர் ஆனதெல்லாம் அநியாயம் ! தொண்டர்கள் இதையெல்லாம் கேள்வி கேட்கவே மாட்டார்களா?

இன்னொரு பக்கம் செங்கோட்டையன் இந்த ஆட்சி சசிகலா வழி காட்டுதலின் படி தான் நடக்கிறது என்று பேட்டி  கொடுக்கிறார். கொடுமைடா சாமி !

அலுவலகத்தில் சில தீவிர அதிமுக நண்பர்கள்  இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாருமே சென்னைக்கு வெளியே சொந்த ஊரை  கொண்டவர்கள். சசிகலாவை தீவிரமாக  வெறுக்கிறார்கள். பன்னீர் மற்றும் தீபா தான் உண்மையான அதிமுக என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். (தீபாவை எப்படி சார் ஏத்துக்குறாங்க !!)

அடுத்த சில வருடங்களில் அதிமுக மிக மிக  வலுவிழக்கும்.எப்போது சட்ட மன்ற தேர்தல் நடந்தாலும் திமுக எளிதில் நிச்சயம் வெற்றி  பெறும் (சட்ட மன்ற தேர்தல் என்று தான் சொன்னேன். பஞ்சாயத்து தேர்தல் எப்படி போகும் என தெரிய  வில்லை; பல நேரம் ஆளும் கட்சி தான்  பஞ்சாயத்து தேர்தலில் பல தகிடுதத்தங்களுடன் ஜெயிக்கும் )

மிக வலுவிழந்த ஒரு முதல்வர் நீண்ட நாள் நீடிப்பது தமிழகத்திற்கு எந்த விதத்திலும் நல்லது இல்லை.. ! புது investments வராது;  நல்ல ப்ராஜெக்ட்கள் கிடைக்காது ; மாநிலத்தின் முன்னேற்றமே சற்று  பின் தங்கி விடும் !!

சென்னை கிளைமேட் 

என்னை போல காலையில் வாக்கிங் போகும் ஆசாமிகளுக்கு சென்னையின்  கிளைமேட் ஒரு நூதனமான பிரச்னையை தருகிறது; காலை 6 மணி வரை வெளிச்சம் எட்டி பார்க்காமல் இருளோன்னு இருக்கிறது. சரி வெளிச்சம் வரட்டும் என்றே காத்திருப்பேன் (இருட்டில் நடக்கும் போது பாம்பை மிதித்தால் என்னாவது என்ற பயம் ஒரு காரணம்... !)  ஆறு - ஆறே காலுக்கு வெளிச்சம்  வருகிறது;அடுத்த அரை மணியில் வெய்யில் சுளீர் என அடிக்க ஆரம்பித்து  விடுகிறது. ஒன்றரை மணி நேரம் நடை + ஓட்டத்தில் 10 கிலோ  மீட்டர் தூரம் தினம் கடக்க  நினைப்பேன். இந்த இருள் + வெய்யில் சேர்ந்து செய்யும் சதியால் சில நேரம்  முடிவதில்லை.

கோடை துவங்குகிறது.. பார்க்கலாம்.. இனியாவது வெய்யில் அதிகம் இல்லா வெளிச்சம் ஒரு மணி நேரமாவது நீடிக்கிறதா என !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...